வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (14:39 IST)

டி20 உலகக்கோப்பை : யுவராஜ், ஹர்பஜன் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு

டி20 உலகக்கோப்பை : யுவராஜ், ஹர்பஜன் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு

நடைபெறவுள்ள டி 20 உலகக்கோப்பைக்கு தோனி தலைமையிலான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
 

 
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மார்ச் 13ஆம் தேதி அன்று இந்தியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.
 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் டி 20 உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. இதில், நடந்துமுடிந்த உலகக்கோப்பை போட்டியில் கழற்றிவிடப்பட்ட யுவராஜ் மற்றும் ஹர்பஜன்சிங் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 

 
அதேபோல, காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்காமல் இருந்த முஹமது ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களான ஹர்த்திக் பாண்டியா, ஜாஸ்பிரிட் பும்ரா ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
 
அணி வீரர்கள்:
 
மகேந்திர சிங் தோனி (கே&வி.கே), விராட் கோலி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, அஜிங்கே ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், முஹமது ஷமி, ஹர்த்திக் பாண்டியா, ஜாஸ்பிரிட் பும்ரா, பவன் நெகி, ஆஷிஷ் நெஹ்ரா