வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2015 (16:16 IST)

விராட் கோலியின் நடத்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது - ஜக்மோகன் டால்மியா

விராட் கோலியின் நடத்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.
 
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி களத்திலும் ஆவேசமாக விளையாடக்கூடியவர். அவர், அதிரடி ஆட்டத்திற்கு மட்டுமல்ல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர்தான். உலகக்கோப்பை தொடரின்போது பத்திரிக்கையாளரை தாக்கியது.
 

 
மேலும், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது, சதத்தை பதிவு செய்தவுடன் தனது காதலிக்கு பறக்கும் முத்தமிட்டார். மேலும், ஷிகர் தவானுடன் உடை மாற்றும் அறையில் சண்டை என்ற பிரச்சனை உள்ளிட்ட விஷயத்திலும் அவர் பெயர் அடிப்பட்டது.
 
இந்நிலையில், விராட் கோலியின் நடத்தைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று ஜக்மோகன் டால்மியா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேவையான சமயத்தில் அவற்றை திருத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.