வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (15:09 IST)

அலப்பறையில் மேற்கிந்திய தீவுகள் அணி: மேலாடை இல்லாமல் ஆட்டம் போட்ட பிராவோ, கெயில்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 193 என்ற அபார இலக்கை அசால்டாக எட்டிப்பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள் அணி.


 
 
பொதுவாகவே மேற்கிந்திய வீரர்கள் நடனமாடும் பழக்கம் உடையவர்கள். விக்கெட்டுகள் வீழ்த்தினாலோ, கேட்ச் பிடித்தாலோ அவர்களுக்கே உரிய பாணியில் நடனமாடி அந்த மகிழ்ச்சியை கொண்டாடுவார்கள்.
 
இந்நிலையில் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினால் அமைதியாகவா இருப்பார்கள் மேற்கிந்திய அணி வீரர்கள். அதுவும் 193 ரன் இலக்கை துரத்தி பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்கள்.
 
இந்த வெற்றியை மேற்கிந்திய வீரர்கள் தங்கள் நடனம் மூலம், வீரர்களுக்கான உணவு அறையில் மற்றும் உடைமாற்றும் அறையில் கொண்டாடியுள்ளார்கள். அந்த அணியின் மூத்த வீரர்களான பிராவோ மற்றும் கெயில் ஆகியோர் உணவு அறையில் மேலாடை இல்லாமல் நடமாடி அலப்பறை கொடுத்தனர்.

 

நன்றி: iDreamNews
 
பின்னர் வீரர்கள் உடை மாற்றும் அறையிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தங்கள் வெற்றியை நடமாடி கொண்டாடினர்.