வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2015 (16:14 IST)

ஆட்ட நாயகன் விருதை சென்னை மக்களுக்கு அர்பணித்த ரஹானே

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து உதவிய ரஹானே தனது ஆட்ட நாயகன் விருதை கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்தார்.


 
 
இரண்டு இன்னிங்சிலும் இரண்டு சதங்களுடன் 227 ரன்கள் எடுத்து டெல்லி டெஸ்ட்டில் ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்ற ரஹானே தனக்கு கிடைத்த விருதை கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
 
இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் தொடர் நாயகன் விருதை பெற்றார். தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.