1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (13:17 IST)

தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழி: ரோஜர் பின்னி, ஸ்டூவர்ட் பின்னிக்கு நிகழ்ந்த ஒற்றுமை

இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னிக்கு அவரது தந்தைக்கும் ஒரு ஒற்றுமை அரங்கேறியுள்ளது.
 

 
இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி வருகிற 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததால், கூடுதல் பலமாக அணியில் ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார்.
 
இந்நிலையில் ஸ்டூவர்ட் பின்னிக்கும் அவரது தந்தைக்கும் இத்தொடர் மூலம் ஓர் ஒற்றுமை நிகழ்ந்துள்ளது.  ஆம் கடந்த 1983 ஆம் ஆண்டு இந்திய அணி வென்ற உலகக்கோப்பைக்கு பிறகு அதாவது 1985 ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. 
 
இந்த தொடரில் அவரது தந்தை ரோஜர் பின்னி இடம்பிடிக்கவில்லை. எனினும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஜர் பின்னி இடம்பிடித்து விளையாடியுள்ளார். தற்போது இதே சூழல் அவரது மகனான ஸ்டூவர்ட் பின்னிக்கும் நிகழ்ந்துள்ளது. முதல் போட்டியில் இல்லாத அவர் 2 ஆவது போட்டியில் விளையாடவுள்ளார் என்பதே அந்த கூடுதல் சிறப்பு. இந்த அறிய அதிசயம் சுமார் 30 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.