1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (20:10 IST)

IND-ENG 3-வது டெஸ்ட் போட்டி ; இந்திய அணி சூப்பர் வெற்றி...

அகமதாபாத்தில் நடைபெற்ற  3 வது டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் அணியும் இரண்டாவது அணியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.

மூன்றாவது டெஸ்ட் உலகில் மிகப்பெரிய மைதானமான குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் நடந்து வருகிறது.

இதில் இங்கிலாந்து அணி திணறியது. பின்னர், இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 49  ரன்களை வெற்றி இலக்கான நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய இந்திய அணிக்கு விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தற்போது இந்திய அணி 2 :1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் இன்றைய போட்டியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய வீரர் அஸ்வின் 400 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதற்கு முன் கும்ளே(619 விக்கெட்டுகள்), ஹர்பஜன்(434 விக்கெட்டுகள்) கபில்தேவ்( 417 விக்கெட்டுகள்) வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.