வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Bharathi
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (13:09 IST)

”தோனி தலைமையில் விளையாடியது அதிர்ஷ்டம்” - டூ பிளிசிஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மீது தாம் அளப்பெறும் மரியாதை வைத்திருப்பதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் டூ பிளஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.


 
 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் 5 சீசன்களில் விளையாடிவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டூ பிளிஸ்சிஸ். முந்தைய ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்த நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் டூபிளிசிஸ்.
 
"இக்கட்டான சூழ்நிலையிலும் தோனி சாந்தமாக இருப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இது குறித்து அவரிடம் நான் பல முறை கேட்டுள்ளேன். தோனியின் தலைமையில் விளையாடியதற்கு நான் அதிஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர் மீது நான் அளப்பெறும் மரியாதை வைத்துள்ளேன் " ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி எனது ஆட்டத்திறனை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.