வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2015 (19:52 IST)

பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் - தோனி வேண்டுகோள்

ஒவ்வொரு பெண்கள் அல்லது சிறுமிகளை காப்பது நமது கடமை என்று இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
 

 
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியை வைத்து பெண்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ ஒன்றை எடுத்துள்ளது.
 
அந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பெண்களை மதிக்க வேண்டும், பெண்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிமொழியை தோனி தெரிவித்துள்ளார்.
 
ஒவ்வொரு பெண்கள் அல்லது சிறுமிகளை காப்பது நமது கடமை என்றும் தோனி வீடியோ பிரச்சாரத்தில் தெரிவித்து இருக்கிறார்.
 
இந்த வீடியோ மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவி சாஸ்திரி, அம்பதி ராயுடு ஆகியோரை வைத்தும் அந்த நிறுவனம் விழிப்புணர்வு வீடியோ எடுத்திருந்தது.