ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: சென்னை அணியை சேர்க்க முடிவு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளை நீக்கும் திட்டம் இல்லை என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
சூதாட்டப் புகாரின் மேல் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ரண்டாண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்த நிலையில், பிசிசிஐ செயற்குழு கூட்டம் மும்பையில் நேற்று தலைவர் ஷஷாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது இரண்டாண்டுகள் தடைக்கு பின்னர், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளை மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் சேர்க்க இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், வரும் சீசனுக்காக புதிதாக இரண்டு அணிகளை சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.