1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2016 (12:14 IST)

தண்ணி அடிக்க அழைப்பு: பெண் நிருபரிடம் வரம்பு மீறிய கெயில்

மேற்கு இந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் போட்டியில் தன்னிடம் பேட்டி எடுக்க வந்த பெண் நிருபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு பலரின் கண்டனங்களையும் பெற்று வருகிறார்.


 
 
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் 20 ஓவர் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மெல்போர்ன் அணிக்காக விளையாடும் கிரிஸ் கெயில் டாஸ்மேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 15 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார்.
 
கெயில் ஆட்டமிழந்த பின் தொலைக்காட்சி பெண் நிருபருக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போது பெண் நிருபரை பார்த்து உன் கண்களை பார்ப்பதற்காகவே இந்த போட்டியில் கலந்து கொண்டேன் என்றார், மேலும் ``நாங்கள் இப்போட்டியில் எப்படியும் வென்று விடுவோம். அதற்கு பிறகு நாம் சேர்ந்து 'தண்ணி' அடிக்கலாம். வெட்க பட வேண்டாம்'' என்றார்.
 
பெண் நிருபரிடம் கெயிலின் இந்த வரம்பு மீறிய பேச்சுக்கு இங்கிலாந்தின் முன்னாள் ஆண்ட்ரூ பிளிண்டாப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களிலும் பலர் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
கெயிலின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதுகுறித்து அவர் விளையாடும் அணி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும். மேலும், பிக்-பாஸ் கிரிக்கெட் போட்டியை குழந்தைகள், பெண்கள் மற்றும் குடும்பமாக கண்டு கழிக்கின்றனர். எனவே, இதுபோன்ற செயல்களுக்கு இங்கு இடமில்லை என பிக்பாஷ் போட்டியின் முதன்மை செயல் அலுவலர் ஆண்டனி எவரார்ட் தெரிவித்தார்.