வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2015 (12:16 IST)

திருப்பு முனையை ஏற்படுத்திய கேட்ச் - இரு வீரர்கள், ஒரு கேட்ச் [வீடியோ]

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டிம் சவுதியும், கருண் நாயரும் அற்புதமாக கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.
 
8ஆவது ஐபிஎல் போட்டி 3ஆவது லீக் போட்டி நேற்று புனேவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதலில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 

 
இரண்டாவதாக களமிறங்கிய பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 18.5 ஓவர்களுக்கு 131 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. அப்போது அதிரடி வீரர் ஜார்ஜ் பெய்லி களத்தில் நின்று கொண்டிருந்தார். வெற்றிக்கு 31 ரன்களே தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
அப்போது பந்தை சிக்சரை நோக்கி அடித்தார். அங்கே எல்லைக் கோட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த டிம் சவுதி பிடித்தவுடன் தடுமாறிய நிலையில் வெளியே எறிந்தார். அப்போது அருகில் ஓடி வந்து கொண்டிருந்த கருண் நாயர் தாழ்வாக வந்த அந்தப் பந்தை கேட்ச் பிடித்தார். இந்த அற்புதமான கேட்ச்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.
 
வீடியோ கீழே: