செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : திங்கள், 19 மே 2014 (11:17 IST)

ஐபிஎல் 7:திரில்லர் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய பெங்களூரு

இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள ஐபிஎல் 7 கிரிக்கெட் தொடரில் சென்னை பெங்களூரு அணிகளுக்கு  இடையே நடைபெற்ற போட்டியில், சென்னை அணியை இறுதி ஓவரில் பெங்களூரு அணி வீழ்த்தியது. 
விறுவிறுப்பான இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 
 
ஆரம்பம் முதலே நிதானமாக ரன்களை குவித்த சென்னை அணியால் 20 ஓவர் முடிவில்  4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. 
 
ரெய்னா 48 பந்துகளில் 62 ரன்களும், ஜடேஜா 9 பந்துகளில் 10 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 
 

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய தொடக்க வீரர்களாக  பார்த்திவ் பட்டேல், விராட் கோலி போன்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 
அதற்கு பின்னர் களமிறங்கிய டி வில்லியர்ஸ், கிரிஸ் கெய்ல் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி வெல்வதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு என்ற சூழல் நிலவியபோது டி வில்லியர்ஸ், கிரிஸ் கெய்ல் ஆகியோர் சிக்சர்கள் அடித்து நிலையை சரிசெய்தனர்.
 
அதற்கு பின்னர் கெய்ல் 46 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யுவராஜ் சிங் சிக்சர் அடித்து அணியை எளிதாக வெற்றி பெற செய்ய உதவினார். அதன் பின் வெற்றி இலக்கை அந்த அணி சுலபமாக எட்டியது.