வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. கதைகள்
Written By Webdunia

விடுகதைக்கு விடை தெரியுமா குழந்தைகளே?

‌‌கீழே கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரி‌ந்தா‌ல் கூ‌றி‌விடு‌ங்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ற்கு‌ப் போ‌ய் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.

1. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

2. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?

3. காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?

4. தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?

5. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?

6. காற்றிலே பறக்கும் கண்ணாடி குண்டு, தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன?

7. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?

8. ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?

9. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?

10. நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?

விடைகளை‌க் காண அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ற்கு...

விடைக‌ள்

1. வாழைப்பூ

2. பேனா

3. நாவல் பழம்

4. தேங்காய்

5. காய்ந்த மிளகாய்

6. நீர்க்குமிழி

7. விரல்கள்

8. பம்பரம்

9. கிளி

10. பூனை