அம்மா இப்ப ரொம்ப மாறிட்டாங்க. இப்பல்லாம் சாதம் ஊட்டறதில்லை. தட்டுல சாதம் வச்சிட்டு சாப்பிட சொல்லிட்டு தம்பி பாப்பாவ தூக்கி வச்சிக்கறாங்க. ‘நான் அப்படியா பெரிய குழந்தையாயிட்டேன்’னு நினைச்சா யாழினி. ஒருநாள் சாப்பிடலேன்னு அடம் பிடிச்சப்போ அடிக்கவும் செஞ்சாங்க. இப்பல்லாம் அவங்கள பார்க்கவே கோவம் வருது. தம்பிய பார்த்தா எரிச்சலா இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியல. அப்பாவும் அப்படிதான். முன்னயெல்லாம் வீட்டுக்கு வந்ததும் முதல்ல தன்னை கொஞ்சிட்டுதான் அப்புறம் கால் அலம்பவே போவார். இப்ப தம்பியதான் அதிகமா கொஞ்சறார். யாழினி அடம் பிடிச்சா மட்டும்தான் அவளை கவனிக்கறார். இதுல அடிக்கடி, ‘தம்பி பாப்பாவ நீதான் பாத்துக்கணும்’னு உபதேசம் வேற.
இதில் மேலும் படிக்கவும் : |