மூணாவது படிக்கும் பார்கவி செம சுட்டி. அதுவும் அவளோட தோழி தாணுவோட சேர்ந்துட்டா அவ்ளோதான். பயங்கரமா அமர்க்களம் பண்ணுவாங்க. புதுசு, புதுசா யோசிப்பாங்க. அவங்க தெருவுல இருக்கற மஞ்சுளா வேற ஸ்கூல்ல படிக்கறா. அவ மேஜிக்னு சொல்லி விரல்ல ஏதோ பண்ணுவா. அதனால ரெண்டு பேருக்கும் மேஜிக் கத்துக்கணும்னு ஆசை.