நடுக்கடலில் திமிங்கிலத்தின் சடலத்தின் மீது ஏறி, 2 மீனவர்கள் எடுத்த புகைப்படம்.. நெட்டிசன்கள் கண்டனம்..!
கடலில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு இராட்சத திமிங்கிலத்தின் சடலத்தின் மீது ஏறி, மதுபோதையில் இருந்த இரண்டு மீனவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், அந்த நபர்கள் சிரித்துக்கொண்டே சடலத்தின் மீது நின்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தெரிகிறது. இந்த வீடியோவை பதிவேற்றிய நபர், அந்த திமிங்கிலம் அப்போதுதான் இறந்ததாகவும், தாங்கள் அனைவரும் போதையில் இருந்ததால் அவ்வாறு செய்ததாகவும் எள்ளிநகையாடும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இந்த செயல் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.
இயற்கையையும், ஒரு பிரம்மாண்டமான உயிரினத்தின் சடலத்தையும் மீனவர்கள் அவமதித்துவிட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அழுக தொடங்கும் திமிங்கிலத்தின் உடல் உயிரி ஆபத்து நிறைந்தது என்பதை அறியாமல், சுயநினைவின்றி அவர்கள் செய்த செயல் முட்டாள்தனமானது என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
Edited by Siva