ஆண் குழந்தை பிறக்க சிகிச்சை அளிக்கும் மருத்துவர்!
இந்த நாகரீகக் காலத்தில் பெண்களும் ஆண்களைப் போலத்தான் வளர்க்கப்படுகிறார்கள். ஆனாலும் இன்னும் சில குடும்பங்களில் ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆண் குழந்தை வேண்டி மந்திரவாதிகள் மற்றும் ஏமாற்றுக்காரர்களை நாடுவதும், பெண் குழந்தையை பிறப்பதற்கு முன்பே கொல்வது போன்ற கொடிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் இந்த பிரச்சனையைத்தான் உங்கள் முன் வைக்கிறோம். நாங்கள் அறிமுகம் செய்து வைக்கப் போகும் நபர் அளிக்கும் மருந்தை சாப்பிட்டால் ஆண் பிள்ளை பிறக்குமாம்.பவன் குமார் அஜ்மேரா என்ற ஆயுர்வேத மருத்துவரான இவர் அளிக்கும் மருந்து, பிறக்கும் குழந்தையின் பாலினத்தையே நிர்ணயிக்கும் சக்தி கொண்டது என்கிறார்.இந்தூரில் காந்திநகர் பகுதியில் அமைந்திருக்கும் இவரது மருத்துவமனையின் சுவர் முழுவதும் இவரது சாதனைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.