மஹாசிவராத்திரி என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சிவராத்திரிதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை மஹாசிவராத்திரி என்கிறோம். சிவராத்திரியைக் கொண்டாடுவதும் அல்லது மஹாசிவராத்திரியைக் கொண்டாடுவதும், இருளைக் கொண்டாடுவதாகத்தான் இருக்கின்றன.