பாரம்பரிய இசையான கர்நாடக இசையையும், சென்னையையும் பிரிக்க முடியாது. டிசம்பர் மாதம் இங்கு நடக்கும் மார்கழி உற்சவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து இசை ரசிகர்கள் வருவது வழக்கம்.கலைஞர்களின் அரங்கேற்றங்களால் சென்னையில் உள்ள அனைத்து சபாக்களும் கலகலப்பாகக் காணப்படும்.பல இளம் இசை கலைஞர்கள் ஆண்டுதோறும் அரங்கேற்றம் கண்டாலும், பள்ளி பருவ குழந்தைகளிடம் பாரம்பரிய இசையைக் கொண்டு செல்லும் பணி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை.