அதிமுக படுத்து விட்டது: மு.க.ஸ்டாலின்
மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசுதான் படுத்து விட்டது என்று கூறினார்.
மதுரை நடந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதால் திமுக சோர்ந்துபோய்விடவில்லை. ஐந்து மாதங்களாக மக்கள் பிரச்சனைகளுக்காக செயலாற்றி கொண்டிருக்கிறோம்.
ஆனால் அதிமுக அரசுதான் இப்போது படுத்து விட்டது. இது மக்களுக்கே தெரியும். நான் வேறு அர்த்தத்தில் சொல்லவில்லை. திமுக தான் ஆட்சியிலிருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், என்றார்.