நமது நாட்டின் பருப்பு உற்பத்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது தேவையைக் காட்டிலும் அதிகம் இருந்துள்ளது. அதனால் ஏற்றுமதியும் ஆகியுள்ளது. ஆனால் மக்கள் தொகை அதிகரித்த அளவிற்கு பருப்பு பயிர் செய்யும் நில அளவு உயராததும், உற்பத்தி அளவு மிகக் குறைவாக இருப்பதுமே இன்று நமது நாடு எதிர்கொள்ளும் பருப்பு பற்றாக்குறைக்கும், இறக்குமதிக்கும் காரணங்களாகும் என்று இதுபற்றி ஆய்வு செய்து வேளாண் அமைப்புகள் கூறுகின்றன.