இந்தியாவில் ஜனநாயகம் என்பது இந்நாட்டுத் தலைவர்களின் குடும்பநாயகமாகிவிட்ட அவலம் முழுமை பெற்றது இந்த ஆண்டில்தான். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்று என்ற முழக்கத்திற்கு இந்த குடும்ப ஆட்சிகளும் அரசியலுமே மறுக்கவியலாத ஆதாரங்களாகத் திகழ்கின்றன.