sinoj kiyan|
Last Modified திங்கள், 13 ஜனவரி 2020 (21:04 IST)
இளவரசர் ஹரி மற்றும் மேகான் ராஜ பொறுப்பில் இருந்து விலகப் போவதாக பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் அரச பொறுப்பை துறக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது உலகத்திற்கு தனி மரியாதை உள்ளது. இந்நிலையில், இளவரசர் ஹரி மற்றும் மேகான் அரச குடும்பத்தில் இருந்து விலகி வெளிநாட்டில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அரச குடும்ப சொத்துகள் பட்டங்களை துறக்கப் போவதாக அறிவித்த நிலையில், தற்போது, அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஹாரி இந்த முடிவை தவிர்க்க வேண்டும் என ராணி எலிசபெத் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிகிறது.