வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (17:44 IST)

18 வயது சிறுவனை மணந்த 5 குழந்தைகளின் தாய்

மலேசியாவில் 5 குழந்தைகளின் தாயும் 18 வயது சிறுவனும் திருமணம் செய்து கொண்டனர்.


 

 
மலேசியாவில் உள்ள பியூபோர்ட் பகுதியை சேர்ந்த மொசுத்சுபி அலின்(18) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தயாங் சோபியா குஸ்டி(42) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்தது.
 
சோபியா குஸ்டி என்பவர் 5 குழந்தைகளின் தாயார். இதுகுறிந்து பேட்டியளித்த மொசுத்சுபி அலினின் தந்தை கூறியதாவது:-
 
அவர்கள் இருவரும் தங்களது சொந்த முடிவை மெற்கொள்ள போதிய முதிர்ச்சி உள்ளவர்கள். அதன்படி அவர்கள் திருமணம் செய்துள்ளனர். எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை மொசுத்சுபி மீது சோபியா காதல் வசப்பட்டுள்ளார். இது கடவுள் எடுத்த முடிவு.