வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (11:01 IST)

"அவருக்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்" - விவாகரத்தின் ரகசியத்தை உடைத்தாரா அமலா பால்?

அமலா பால் முதன்முறையாக முன்னாள் கணவரின் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார். 



 
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 
 
சமீபத்தில் அமலா பாலின் முன்னாள் கணவர் ஏஎல் விஜய்,  ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனால் மீடியா அமலா பாலின் பக்கமே தலையவைத்து படுத்திருந்தது.  இருப்பினும் இதை பற்றி எதுவும் வாய்திறக்காமல் வந்த அமலா பால் ஆடை படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பேசும்போது, முன்னாள் கணவர் ஏ.எல் விஜய்யின் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார். 
 
அதாவது, ஆடை படத்தின் ப்ரோமோஷன் விழாவில் ஏ விஜய்யின் இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ள அமலா பால், "விஜய் மிகவும் அன்பான நபர், அவர் சிறந்த மனிதர்,  அவருடைய திருமணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும்  அவர்கள் இருவருக்கும் நிறைய குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என கூறினார். 


 
அவர் பேசியதை வைத்து பார்க்கையில் குழந்தை பிரச்சனையால் தான் இவர்கள் விவாகரத்து பெற்றார்களா...? என கோலிவுட்டில் கிசுகிசுகிக்கப்பட்டு வருகிறது. இது பலரும் யூகிக்கும் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.