இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக ராஜ்பால்சிங் மீண்டும் நியமனம் ?
புனே , ஞாயிறு, 22 நவம்பர் 2009( 14:26 IST )
இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக ராஜ்பால் சிங் நியமிக்கப்படுவார் என்று ஹாக்கி சம்மேளன வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
சில நாட்களுக்கு முன்பு இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் பதவியிலிருந்து ராஜ்பால் சிங்கை நீக்கப்பட்டு,அவருக்குப் பதிலாக சந்தீப் சிங்கை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.பயிற்சியாளர் ஜோஸ் பிராசாவின் இந்த நடவடிக்கைக்கு அணி வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஹாக்கி சம்மேளன தலைவர் ஏ.கே. மட்டூ,புனேவில் வீரர்களையும், பிராசாவையும் சந்தித்து ஆலோ சனை நடத்தினார்.ஆலோசனையின் முடிவில் ராஜ்பால் சிங்கை நீக்கிய முடிவு செல்லாது என்று மட்டூ அறிவித்தார்.
விரைவில் அணியின் கேப்டன் யார் என்பதை ஹாக்கி சம்மேளனம் முடிவு செய்யும் என்றும் அப்போது மட்டூ அறிவித்தார்.
இந்நிலையில் அணியின் கேப்டனாக ராஜ்பால் சிங் மீண்டும் நியமிக்கப்படுவார் என்று ஹாக்கி சம்மேளன வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆர்ஜென்டினாவின் சால்டா நகரில் சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.அப்போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விரைவில் தேர்வு செய்யப்படும்போபோது அணியின் கேப்டனும் தேர்வு செய்யப்படவுள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு புணேவில் பயிற்சி பெற்றுவரும் இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு ஹாக்கி சம்மேள னத்தின் சார்பில் விருந்து வழங்கப்பட்டது. விருந்தின்போது கேப்டன் பதவியை மீண்டும் ராஜ்பால் சிங்குக்கே வழங்க முடிவு செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.மேலும் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.