செய்திகள் | கட்டுரைகள் | சுவையான தகவல்கள்
முதன்மை பக்கம் » விளையாட்டு » விளையாட்டு » செய்திகள் » போதைப் பொருள் : இந்​திய பளு​தூக்​கும் வீரர்​க​ளுக்கு எச்​ச​ரிக்கை
Feedback Print Bookmark and Share
 
போதைப்பொருள் இந்​திய பளு​தூக்​கும் வீரர்​க​ளுக்கு சர்​வ​தேச பளு​தூக்​கும் சம்​மே​ள​னம் ​(ஐட​பிள்​யூ​எ​ப்)​ எச்​ச​ரிக்கை விடுத்​துள்​ ளது.

க​டந்த மாதம் பல்​வேறு இந்​திய பளு​தூக்​கும் வீரர்​கள்,​ போதைப் பொரு​ளைப் பயன்​ப​டுத்​தி​ய​தாக சிக்​கி​னர்.இதை​ய​டுத்து அவர்​கள் மீது இந்​திய பளு​தூக்​கும் சம்​மே​ள​னம் நட​வ​டிக்கை எடுத்​துள்​ளது.

இந்​நி​லை​யில் கொரிய நாட்​டி​ன் கோயாங் நக​ரில் நடை​பெற்று வரு​ம் ஐட​பிள்​யூ​எ​ப்-​பின் செயற்​கு​ழுக் கூட்​டத்தில் போ​தைப் பொரு​ளைப் பயன்​ப​டுத்​தி​ய​தாக சிக்​கிய இந்​திய பளு​தூக்​கும் வீரர்​கள் குறித்த பிரச்னை கூட்​டத்​தில் எழுப்​பப்​பட்​டுள்​ளது.

அடிக்​கடி இந்​திய வீரர்​கள் போதைப் பொரு​ளைப் பயன்​ப​டுத்​து​வ​தாக புகார்​கள் எழுந்து வரு​கின்​றன.இ​னி​யும் இந்​தப் புகார்​கள் இந்​திய வீரர்​கள் மீது எழுந்​தால் அவர்​கள் மீது கடும் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.

இனி​யும் இது​போன்ற போதைப் பொருள் விவ​கா​ரம் எழா​மல் இந்​திய பளு​தூக்​கும் சம்​மே​ள​னம் நட​வ​டிக்கை எடுக்​க​வேண்​டும் என்று கூட்​டத்​தில் வலி​யு​றுத்​தப்​பட்​டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்