சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஈராக் பங்கேற்க ஃபிபா தடை
பாரீஸ், சனி, 21 நவம்பர் 2009( 16:40 IST )
ஈராக் அரசின் குறுக்கீடு காரணமாக ஈராக் கால்பந்து கூட்டமைப்பு மற்றும் அதில் உள்ள வீரர்க்ள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உலக கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) தடைவிதித்துள்ளது.
இதுதொடர்பாக ஃபிபா இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “ஃபிபா விதிகளின்படி, ஈராக்கைச் சேர்ந்த கால்பந்து கிளப், கால்பந்து குழுவினர் இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் எந்த மாநாட்டிலும், ஈராக் கால்பந்து கூட்டமைப்பு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படுவதுடன், ஈராக் கால்பந்து கூட்டமைப்பிற்கு இனி எந்தவித நிதியுதவியும் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.