அமெரிக்க ஏ.டி.பி. டென்னிஸ்: அரையிறுதியில் சோம்தேவ்
புதுடெல்லி, சனி, 7 நவம்பர் 2009( 17:56 IST )
அமெரிக்காவின் சர்லோடஸ்விலியில் நடந்து வரும் ஏ.டி.பி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் இளம் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் முன்னேறியுள்ளார்.
டென்மார்க் வீரர் மட்வி மிடெல்கூப்பை எதிர்த்து காலிறுதியில் விளையாடிய சோம்தேவ், 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ரியான் ஸ்வீட்டிங், சக நாட்டு வீரர் மைக்கேல் ருசேலை 6-2, 3-6, 7-6(1) என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். அரையிறுதியில் இவர் சோம்தேவை எதிர்த்து களமிறங்குகிறார்.