ரஷ்யாவில் நடைபெறும் சர்வதேச குத்துச் சண்டை போட்டிகளில் விளையாட 9 உறுப்பினர்கள் கொண்ட இந்திய குத்துச் சண்டை அணி இன்று காலை ரஷ்யா புறப்பட்டுச் சென்றது.
48 கிலோ எடைப்பிரிவில் பஞ்சாபின் அமம்தீப் சிங், 57 கிலோ எடைப்பிரிவில் டெல்லியைச் சேர்ந்த அட்சய் குமார், 69 கிலோ பிரிவில் சர்வீசஸ் வீரர் ஜெய் சிங் பாட்டீல், 75 கிலோ பிரிவில் குல்தீப் சிங், 81 கிலோ பிரிவில் ரயில்வே வீரர் ஜஸ்வீர் சிங், 91 கிலோ பிரிவில் மன்பிரீத் சிங் ஆகிய வீரர்கள் இந்தக் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இவர்களுடன் தலைமைப் பயிற்சியாளர் ஷிவ் சிங் சென்றுள்ளார். |