சீனாவின் செங்சுவோவில் நடந்து வரும் சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.
உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தொடரில், இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை அய்-கோடோ உடன் மோதிய சாய்னா, 21-12, 21-10 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி மொத்தம் 21 நிமிடங்களே நீடித்தது.
நாளை நடைபெறும் காலிறுதிச் சுற்றில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள சீன வீராங்கனை லின்-சு உடன் சாய்னா மோத உள்ளார்.
கடந்த வாரம் நடந்த ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரில் தோல்வியடைந்த சாய்னா, தற்போது நடந்து வரும் சீனா மாஸ்டர்ஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய ரசிகர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
|