சாக்காவில் நடைபெறும் சில்ரன் ஆஃப் ஏஷியா சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தப் பிரிவில் இந்தியா 13 பதக்கங்களை வென்றது.
இதில் 6 தங்கப்பதக்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
44 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக், 69 கிலோ எடைப்பிரிவில் சுமித் ஷெராவத், 76 கிலோ பிரிவில் பிரவீண், 38 கிலோ பிரிவில் தீப்தி ராஜ்புத், 49 கிலோ பிரிவில் பிரியங்கா, 56 கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி மாலிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.
இதே போட்டித்தொடர் குத்துச் சண்டை பிரிவிலும் இந்திய வீரர்களுக்கு 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
|