அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடைபெற்ற ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை இந்திய-பாகிஸ்தான் இணையான பிரகாஷ் அமிர்தராஜ்-குரேஷி இணை வென்றது.
பிரிட்டனின் ஜொனாதன் முர்ரே, டென்மார்க்கின் ஃபிரெடெரிக் நீல்சன் இணையை 6- 3, 7- 6 என்ற செட்களில் அமிர்தராஜ்-குரேஷி இணை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய-பாகிஸ்தான் இணைக்கு 3,950 யூரோ பரிசுத் தொகை கிடைத்துள்ளது. மேலும் 60 ஏ.டி.பி. தரவரிசைப் புள்ளிகளையும் இந்த இணை பெற்றுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்ற மற்றொரு இந்திய இரட்டையர் இணையான அஷுடோஷ் சிங்-ஹர்ஷ் மன்கட் இணை முதல் சுற்றில் தோற்றது.
ஒற்றையர் போட்டியில் பிரகாஷ் அமிர்தராஜ் ஆஸ்ட்ரேலிய வீரர் ராபர்ட் ஸ்மீட்ஸிடம் காலிறுதியில் தோல்வியை தழுவினார்.
|