வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான மைதானங்கள் தயாராகி விட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
குறிப்பாக சீனத் தலைநகர் பீஜிங்கில் பறவைக்கூடு வடிவில் உருவாக்கபட்டுள்ள தேசிய விளையாட்டு மைதானம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தயாராகிவிட்டது என்று கூறியுள்ளது.
மேலும் போட்டிகள் நடைபெறவுள்ள 37 இடங்களும் தயார் நிலையில் உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
பறவைக்கூடு வடிவ தேசிய விளையாட்டு மைதானத்தில்தான் ஒலிம்பிக் துவக்கவிழா மற்றும் நிறைவு விழாக்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
|