பிரான்சில் வரும் 23-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் வில்வித்தை உலகக் கோப்பை போட்டிகளில் பங்கு பெற 5 வீரர்கள் கொண்ட இந்திய அணி புறப்பட்டது.
ஜயந்தா தாலுக்தார், ராகுல் பானர்ஜி, பிரியங்கம் ரஞ்சன் சிங் ஆகியோருடன் மேலாளராக அபாய் ஜவா செல்கிறார்.
பீஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற வீரர் மங்கல் சிங் சம்பியா கொரியாவில் சிறப்புப் பயிற்சி மேற்கொள்ள சென்றிருப்பதால், இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை.
மகளிர் வில்வித்தை அணி சமீபகாலங்களாக திறமையை வெளிப்படுத்தாததால், உயர் மட்ட போட்டியான உலகக் கோப்பை போட்டிக்கு அனுப்பப்படவில்லை என்று இந்திய வில்வித்தைக் கழக செயலர் குஞ்சன் அப்ரால் தெரிவித்தார்.
|