சந்தோஷ் கோப்பை தேசிய கால்பந்து அரையிறுதிக்கு மேற்குவங்கம், கர்நாடகா அணிகள் தகுதி பெற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற போட்டிகளில் மகாராஷ்டிர அணியுடன் மேற்குவங்கம் 1-1 என்று டிரா செய்தது. கர்நாடகா அணி கோவா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 'பி' பிரிவில் 6 புள்ளிகளுடன் கர்நாடகா முதலிடமும், 5 புள்ளிகளுடன் மேற்குவங்கம் 2-ம் இடத்திலும் உள்ளதால் இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதியில் சர்வீசஸ்-மேற்கு வங்க அணிகள் ஜூன் 12ம் தேதியிலும், இரண்டாவது அரையிறுதியில் கர்நாடகா - பஞ்சாப் அணிகள் ஜூன் 13ம் தேதியும் மோதுகின்றன.
|