ஃபிரான்சில் நடைபெற்றுவரும் ஆம்பர் பிளைன்ட்ஃபோல்ட் மற்றும் அதிவேக செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஆர்மீனிய வீரர் ஆரோனியனிடம் ஒன்றில் தோற்றும், மற்றொன்றில் டிரா செய்தும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
உலக சாம்பியனான ஆனந்த் அதிவேக செஸ் போட்டியில் டிரா செய்த்ததும், பிளைன்ட்ஃபோல்டில் தோற்றதும் அவரை நான்காவது இடத்திற்குத் தள்ளிவிட்டது.
இந்த வெற்றியின் மூலம் 10.5 புள்ளிகளுடன் ஆரொனியன் முதலிடத்தில் உள்ளார். நார்வேயின் கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஹங்கேரியின் பீட்டர் லீக்கோ 3வது இடத்திலும் உள்ளனர். இன்னும் மூன்று சுற்றுகள் மட்டுமே உள்ளதால் ஆனந்த இப்போட்டிகளில் முதலிடத்திற்கு வருவது கடினமாகும்.
|