,,, எதற்காக ஒலிம்பிக் போட்டிகளை கருவியாக்க வேண்டும்? அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒலிம்பிக் போட்டிகளை கருவியாக்குவதால் தீர்வு ஏற்படுமா?
1974ஆம் ஆண்டு மூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த 13 இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர். இந்தப் படுகொலைகள் மூலம் தங்களுடைய பிரச்சனையை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக யாசர் அராஃபத்தின் இயக்கம் கூறியது.
நமது கேள்வி: பாலஸ்தீன விடுதலை இயக்கம் நடத்திய அந்தப் படுகொலை அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தந்ததா? அல்லது இஸ்ரேலிடமிருந்ததான் விடுதலையைப் பெற முடிந்ததா? எதுவும் இன்று வரை நடக்கவில்லையே.
எல்லாவற்றிற்கும் மேலாக கொல்லப்பட்ட அந்த இஸ்ரேலிய வீரர்களுக்கும் பாலஸ்தீன பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?
மாஸ்கோ ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்ததே ஆப்கானிஸ்தானிற்குத்தான் விடிவு பிறந்துவிட்டதா?
எனவே, உள்நாட்டுப் பிரச்சனையாகட்டும், நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையாகட்டும் அதனை விவாதிக்க வேண்டிய இடம் ஐ.நா. பொதுச் சபை அல்லது பாதுகாப்புப் பேரவை. இதில் விளையாட்டை கருவியாக்குவது தவறு.
திபெத் பிரச்சனை இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டு காலமாக நீடித்து வருகிறது. அப்பிரச்சனைக்கு உரிய வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இப்பிரச்சனையில் சீன அரசு கையாண்டுவரும் அடாவடித்தனங்கள் எதுவும் உலகமறியாதது அல்ல. ஆனால் அதற்கு ஒலிம்பிக்கை கருவியாக்க அனுமதிக்கக் கூடாது.
அமெரிக்காவாயினும், ஐரோப்பிய நாடுகளாயினும் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்க மற்ற உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். ஒலிம்பிக்கை அரசியல் விளையாட்டாக்க அனுமதிக்கக் கூடாது.
|