முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இழந்த பெருமையை மீட்பது சாத்தியமே!
என்று கூறினேன்” என்றார். எப்படியிருக்கிறது பதில்? இவர்தான் இன்றுவரை நமது ஹாக்கி கூட்டமைப்பின் நிரந்தரத் தலைவர்.

எனவே இந்திய ஹாக்கியை மீண்டும் அதன் உண்மைத் திறனுக்கு உயர்த்த வேண்டுமெனில் இன்றைய நிர்வாகம் நீக்கப்பட்டு, தற்காலிக அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.

இரண்டாவதாக, ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தது அதன் நகரங்கள் ஒவ்வொன்றிலும் - மிக முக்கியமாக தமிழ்நாடு, கர்நாடக. ஒரிசா. ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் - செயற்கை புல் கள வசதிகளை செய்ய வேண்டும். இன்றைய நிலையில் இது மிக மிக அத்தியாவசியமான தேவையாகும். செயற்கை புல் களத்தில் ஆடும் வாய்ப்பு அதிகரிக்க, அதிகரிக்க அதிகமான இளைஞர்கள் போதுமான பயிற்சிப் பெற வாய்ப்பு கிட்டும். திறமைமிக்க விளையாட்டு வீரர்கள் நிறைய பேர் தோன்றுவார்கள்.

இதற்குத் தேவையான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பெற்றுத் தரவேண்டும்.

மூன்றவதாக, தேச அளவில் ஹாக்கிப் பயிற்சியாளர்கள் பட்டியலை உருவாக்க வேண்டும். இவர்களை சரியாக அடையாளம் காண முன்னாள் ஒலிம்பிக் வீரர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். பட்டியலிற்குத் தேர்வாகும் பயிற்சியாளர்களுக்கு அங்கீகாரமும், மாத ஊதியமும் அளித்து ஊக்குவிக்க வேண்டும். இந்திய ஹாக்கியை பழைய நிலைக்கு உயர்த்த இவர்களால்தான் முடியும். பெரும்பாலும் முன்னாள் தேச, சர்வதேச வீரர்களே பயிற்சியாளர்களாக முன்வருவார்கள், அதுவே சிறந்தது.

team
webdunia photoWD
நான்காவதாக, மாவட்ட ஹாக்கி அமைப்புக்களை ஏற்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல் ஊரகப் பகுதிகளில் ஹாக்கி விளையாட்டை மேம்படுத்த முடியாது. திறமை வாய்ந்த இளம் வீரர்களை அடையாளம் காட்டுவதே மாவட்ட விளையாட்டு அமைப்புகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட, ஊரக அளவில் ஹாக்கி விளையாட்டிற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். இதுவரை கடைபிடிக்கப்பட்டு வ‌‌ந்பிச்சைக்கார அணுகுமுறையை முற்றிலுமாக கைவிடவேண்டும்.

இதற்கான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.

ஐந்தாவதாக, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் தாங்கள் பெறக்கூடிய ஆதரவு நிதிகள் (Sponsors), அவைகளை பயன்படுத்திய விதம் ஆகியவற்றை வெளிப்படையாக்க, ஒவ்வொரு நிதியாண்டிலும் வரவு - செலவு அறிக்கை வெளியிடவேண்டும் என்பதை சட்டபூர்வமாக கட்டாயமாக்க வேண்டும்.

விளையாட்டின் பேரால் நடந்துவரும் ஊழல்களைக் களைய இது மிக மிக முக்கியமாகும்.

இந்திய ஹாக்கிக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க, நெருக்கடியான இத்தருணத்தில் மத்திய அரசு தலையிட்டே ஆக வேண்டும். ஒலிம்பிக் விதிமுறைகளை காரணம் காட்டி, பொறுப்பைத் தட்டிக் கழித்தால் அது இந்திய ஹாக்கியை கொன்று விடுவதற்கு ஒப்பாகும்.

இந்திய ஹாக்கிக்கு சோதனையான இந்த கட்டத்தில் மற்றொரு முக்கிய பிரச்சனை உருவாகியுள்ளது. இந்திய ஹாக்கியை மேம்படுத்த தாங்கள் வகுத்த திட்டத்தை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் பிரீடா விரீஸ்மென் ஹாக்கி கூட்டமைப்பிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய ஹாக்கியை தூக்கி நிறுத்த சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் உதவி தேவையா? மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கேள்விக்கு திங்களன்று பதில் தேடுவோம்.


<< 1 | 2 
மேலும்
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு...3
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு... 2
ஹாக்கி நிர்வாகத்தை அரசு முறைபடுத்திட வேண்டும்
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.... 1
சதுரங்கத்தில் ராணிகளின் கொடி பறக்குமா?
சானியா மிர்சா முடிவுக்கு நாமே காரணம்!