சீனாவில் நடைபெற்ற 29-வது ஒலிம்பிக் போட்டிகள் நேற்றிரவு கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. கடந்த 8-ஆம் தேதி சீனத் தலைநகர் பீஜிங்கில் 29-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. 16 நாட்கள் நடந்த இப்போட்டியில் 204 நாடுகளைச் சேர்ந்த 11,028 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மொத்தம் 28 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு 302 தங்கம், 303 வெள்ளி, 353 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. |