இடையில் டேரன் பிராவோ, லாராவை நினைவூட்டும் 3 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். தினேஷ் ராம்தின் இறங்கி ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 6 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க மேற்கிந்திய அணி 27 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் பந்து வீச்சு மீண்டும் படு மோசமாக இருந்தது. கெய்லை வீழ்த்த எந்த வித திட்டமும் இல்லாமல் அவருக்கு வாகாக வீசுகின்றனர் இஷாந்த், ஆர்.பி.சிங், நெக்ரா ஆகிய மூவரும்.
ஆனால் நெஹ்ரா 5 ஓவர்களில் சிக்கனமான 21 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பத்தான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
தினேஷ் கார்த்திக், கம்பீர் ஆகியோர் கொடுத்த அபார அடித்தளத்தின் மீது தோனியின் கேப்டன் இன்னிங்ஸும் கைகொடுக்க இந்தியா இந்த ஒரு நாள் த்டரில் 2- 1 என்று முன்னிலை பெற்றுள்ளது.
கார்த்திக் நேற்று ஷாட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அபாரமான புல் ஷாட்களையும் ஆஃப் திசையில் சில சிறந்த கட் ஷாட்களையும் விளையாடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய கிறிச் கெய்ல் இந்திய அணித் தலைவர் தோனி விளையாடிய ஆட்டத்தை பாராட்டிப் பேசியதோடு, விக்கெட்டுகளுக்கு இடையே அபாரமாக ஓடி தோனி தங்கள் அணி ஃபீல்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் என்று கூறினார்.
ஆட்ட நாயகன் தோனி கூறுகையில், டக் வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறையால் எங்களால் இரண்டாவது பவர் பிளேயை பயன்படுத்த முடியாமல் போனது. நல்ல துவக்கம் தேவைப்பட்டது. கம்பீர் நின்று ஆடினார். நன்றாக ஓடினார். ஸ்பின்னர்களை கவருக்கு மேலும் மிட் விக்கெட்டிற்கு மேலும் தூக்கி அடிப்பதில் சிறந்து விளங்கினர். கடைசி ஓவர் வீசப்படும் முனையில் எப்போதும் ஆன் திசையில் ஒரு சிக்சருக்கு வாய்ப்பிருக்கிறது என்று எங்களுக்குக் தெரிந்திருந்தது. ஏனெனில் காற்று பலமாக வீசியதால் பந்து மாட்டினால் சிக்சர் என்று அறிந்திருந்தோம், அந்த கணிப்பு சரியானதாக அமைந்தது என்றார். |