ஆஸ்ட்ரேலிய உள் நாட்டு கிரிக்கெட் அணியான விக்டோரியா புஷ் ரேஞ்சர்ஸ் அணிக்காக உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 20- 20 கிரிக்கெட் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்படுவதாக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
14 ஆண்டுகளுக்கு முன் மெல்போர்ன் மைதானத்தில் இவர் பந்தை விட்டு எறிகிறார் என்று நடுவர் டேரல் ஹேர் தொடர்ந்து நோ-பால்களாக கொடுத்து அவமானப்படுத்தினார்.
இன்று அதே மைதானத்தில் இவர் விக்டோரியா அணிக்காக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் உள் நாட்டு கிரிக்கெட் விளையாட ஆஸ்ட்ரேலியா ஒப்பந்தம் செய்துள்ள 4-வது அயல் நாட்டு வீரராக முரளிதரன் இருப்பார்.
|