நாளை கால்லே மைதானத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே துவங்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக நட்சத்திர சுழற்பந்து வீச்சளர் முத்தையா முரளிதரன் விளையாட மாட்டார் என்று இலங்கை அணி மேலாளர் பிரென்டன் குருப்பு அறிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த காயம் அவருக்கு ஏற்பட்டது இதனால் அவருக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இவருக்கு பதிலாக மொகமட் அல்லது ஹெராத் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. |