முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சலீம் மாலிக் மீது விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தடையை லாகூர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.
ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் இவர் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்த விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பித்ததால் 2000ஆம் ஆண்டு இவர் எந்த விதமான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று ஆயுள் தடை விதிக்கப்பட்டார்.
1994-ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் சரியாக விளையாடக்கூடாது என்பதற்காக பணம் தருவதாக சலீம் மாலிக் தங்களை அணுகியதாக ஆஸ்ட்ரேலிய வீரர்கள் குற்றம்சாட்டினர்.
ஆயுள் தடையை எதிர்க்து சலீம் மாலிக் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று லாகூர் நீதிமன்றம் ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது. |