மொஹாலியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் நன்றாக விளையாடினர் என்று ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மொஹாலி போட்டியின் துவக்கம் முதலே இந்திய வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள் என்றும், தொடக்க வீரர்களின் ஆட்டம் அருமையாக இருந்ததுடன் அவர்கள் அளித்த சிறப்பான துவக்கத்தை இந்திய அணி தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது என்றும் பாண்டிங் தெரிவித்தார்.
தலைவர் பொறுப்பில் இந்த டெஸ்ட் உங்களுக்கு மோசமான தோல்வியா என்று கேட்டதற்கு, கிட்டத்தட்ட அப்படித்தான் கருதுகிறேன் கூறிய பாண்டிங், இப்போட்டியில் எங்களது பந்துவீச்சு, பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது, சில சமயங்களில் பீல்டிங் செய்வதிலும் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றார்.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் முதல் அனைத்து வீரர்களும் நன்றாக விளையாடினார்கள் என்றும், முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் விளையாடினோம் என்றும் தெரிவித்தார்.
எங்களுடைய குறைகளை நிர்வத்தி செய்து டெல்லியில் அக்டோபர் 29ஆம் தேதி நடக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் என்றார் பாண்டிங். |