பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷொயப் அக்தர் மீது விதிக்கப்பட்டிருந்த 18 மாத காலத் தடையை லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
தடை உத்தரவை ரத்து செய்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அக்தருக்கு விதித்த 7 மில்லியன் ரூபாய்கள் அபராதத் தொகை ரத்து செய்யப்படவில்லை.
அக்தர் மீது முதலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்குக் குழு 5 ஆண்டுகள் தடை விதித்தது. ஆனால் அதன்பிறகு தீர்ப்பாய மேல் முறையீட்டில் இது 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டது.
இந்த 18 மாத தடை உத்தரவை எதிர்த்து அக்தர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.
|