ஐ.பி.எல். சார்பில் நடைபெறும் இருபதுக்கு 20 போட்டியில் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.
பெங்களூருரில் நேற்று இரவு வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், திராவிட் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதியது.
முதலில் விளையாடிய பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக டைலர் 44 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த அணியின் வாட்சன் 61 ரன்களை குவித்தார். ஸ்மித் 49 ரன்கள் எடுத்தார். முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி, தொடர்ந்து 3வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி 2வது தோல்வியை சந்தித்துள்ளது.
|