இந்திய அணித் தலைவர் அனில் கும்ளேவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணித் தலைவர் சுமித் 73 ரன்களில் ஆட்டம் இழந்தார். தற்போது தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்கள் மெக்கன்சி- சுமித் அபாரமாக விளையாடி அரை சதம் எடுத்தனர். வேகப்பந்துக்கு சாதகமாக அமையாத மைதானம் திடீரென சுழற்பந்துக்கு சாதகமாக அமைந்தது.
73 ரன்கள் எடுத்திருந்த சுமித், கும்ளே பந்தில் லஷ்மணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து ஆம்லா களம் இறங்கினார். இவர் மெக்கன்சியுடன் இணை சேர்ந்து விளையாடி வருகிறார்.
உணவு இடைவேளை வரை 109 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்கா அணி, சுமித்தின் அதிரடி ஆட்டத்தால் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. அவர் ஆட்டம் இழந்தவுடன் ரன் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது தென் ஆப்பிரிக்கா அணி ஒரு விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது. மெக்கன்சி 82 ரன்களுடனும், ஆம்லா 17 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
|