மெக்கன்சி, சுமித் ஆகியோரின் அரை சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
தொடக்க வீரர்களான அணித் தலைவர் சுமித்- மெக்கன்சி களம் இறங்கினர். இவர்கள் இந்திய பந்து வீச்சை நன்றாக சமாளித்து விளையாடி வருகிறார்கள். வேகப்பந்துக்கும், சுழற்பந்துக்கும் ஆடுகளம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
இருவரும் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அபாரமாக விளையாடி மெக்கன்சி அரை சதம் எடுத்தார். இவர் 8 பெளண்டரியுடன் 53 ரன்கள் எடுத்துள்ளார். அணித் தலைவர் சுமித் 54 ரன்கள் எடுத்துள்ளார். இவர் 11 பெளண்டரிகள் விளாசினார்.
தற்போது உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்துள்ளது.
|