சென்னையில் நடைபெறும் முதல் கிரிக்கெட் டெஸ்டில் பேட் செய்து வரும் தென் ஆப்பிரிக்கா சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்துள்ளது.
மெக்கன்சி 48 ரன்களுடனும், ஸ்மித் 48 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். துவக்கத்தில் ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த் ஆகியோர் பந்து வீச்சிற்கு களத்தில் எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை. இதனால் சில பவுண்டரிகளை அடித்தனர் தென் ஆப்பிரிக்க துவக்க வீரர்கள்.
ஓரிரண்டு பந்துகள் மட்டையைக் கடந்து சென்றன. கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் தற்போது பந்து வீசி வருகின்றனர். இது வரை தென் ஆப்பிரிக்க துவக்க வீரர்கள் எந்த வித பிரச்சனைகளையும் சந்திக்கவில்லை.
|